Tuesday, August 18, 2009
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
பல பல ப்ளாகுகள் தனியாக வைத்துக்கொண்டு, தனி தனியா போஸ்டிங் செய்ய கஷ்டமாக இருப்பதால், அனைத்தும் ஒன்றாக, இந்த ப்ளாகுக்கு மாற்றி விட்டேன். எல்லோரும் அந்த ப்ளாகில் ஃபாலோவர்ஸாக இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! http://allinalljaleela.blogspot.com
Monday, August 17, 2009
நோன்பு கஞ்சி
இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலங்களில் செய்யும் கஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திறந்தவுடன் ஒரு பவுள் முழுவதும் குடித்தால் நல்ல எனர்ஜி கிடைக்கும்.இதை பல வகையாக செய்யலாம் அதில் இது குக்கர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேரத்திற்கு நல்லது.

தேவையான பொருட்கள்.
சிக்கன் (அ மட்டன் கீமா – 100 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பச்ச பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
பச்ச மிளகாய் – ஒன்று
மிள்காய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணை – ஒரு தேக்கரண்டி
நெய் (அ) டால்டா – ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
வெந்தயம் = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – சிறிது

செய்முறை
1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.
குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.
அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)
இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.
தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.

தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.
நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.
குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.
ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.
சுவையான நோன்பு கஞ்சி தயார்.
இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.
குறிப்பு.
குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
இதை மட்டன் கீமா,வெஜ் டேபுள்ஸ் மட்டும் போட்டு கூட செய்யலாம்.
நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.
இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செட்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.
Sunday, August 16, 2009
மட்டன் (அ) பீஃப் பார்பிகியு (கீரின் மசாலா)

தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பில்லாதது = ஒரு கிலோ
தயிர் = நான்கு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = இரண்டு மேசை கரண்டி
தக்காளி = ஒன்று பெரியது
பச்ச மிள்காய் = ஐந்து
மிளகு தூள் = முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = இரண்டு மேசை கரண்டி (அ)(ருசிக்கு)
கொத்து மல்லி தழை = அரை கட்டு (பொடியாக அரிந்தது)
புதினா = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் = நான்கு மேசை கரண்டி
ஆவிவ் ஆயில் = சுட தேவையான அளவு
லெமன் = முன்று

செய்முறை
1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும், கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய், கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.
2.மிக்சியில் கொத்து மல்லி,புதினா,பச்சமிளகாய்,கருவேப்பிலையை அரைத்து அத்துடன் மிளகுதூள் உப்பு தூள்,மஞ்சள் தூளை சேர்க்கவும்.
தக்காளியையும் அரைத்து சேர்க்கவும்.

3.அரைத்த மசாலாக்களுடன் ,தயிர்,மட்டன் ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை கலக்கவும்.
4.நன்கு கலக்கி ஆலிவ் ஆயிலும் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

5.ஊறிய கறியை BBQ செய்ய கம்பியில் கோர்க்கவும்.
6.BBQ அடுப்பில் தீ மூட்டி நன்கு நெருப்பானதும் சுடவும்.
7.சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் கறியில் விடவும்.
8.திருப்பி போட்டு மறுபடி சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவிடவும்.

9.நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.
10.சுவையான மட்டன் BBQ ரெடி.
குறிப்பு
இதற்கு கீரின் மாசாலா, மற்றும் ரெட் மசாலா அவரவர் விருப்பபடி எதுவேண்டுமானாலும் போடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள குபூஸ்,கார்லிக் சாஸ், சாலட் போன்றவையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Wednesday, August 5, 2009
லெமன் லாலி பாப் சிக்கன்

தேவையான பொருட்கள்
சிக்கன் லாலி பாப் - 12 பீஸ் (லெக் பீஸ்)
லெமென் - இரண்டு
மிளகாய் தூள் = ஒரு மேசை கரண்டி
லெமென் - இரண்டு
மிளகாய் தூள் = ஒரு மேசை கரண்டி
உப்பு தூள் - ஒன்னறை தேக்கரண்டி (தேவைக்கு)
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரன்டு தேக்கரண்டி
கார்ன் பிளார்(சோள) மாவு - இரண்டு மேசை கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு தேகக்ரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரன்டு தேக்கரண்டி
கார்ன் பிளார்(சோள) மாவு - இரண்டு மேசை கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு தேகக்ரண்டி
செய்முறை
1.சிக்கன் லெக் பீஸை சுத்தமாக கழுவி ஆழமாக இரண்டு கீரல்கள் போட்டு ஒரு எலுமிச்சையில் உள்ள சாறை ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.
2.முதலில் லெமென்,உப்பு,கார்ன் மாவு சேர்த்து நன்கு பிசறவும்.
3.பிறகுமிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், எண்ணை சேர்த்து பிசறவும்.
2.முதலில் லெமென்,உப்பு,கார்ன் மாவு சேர்த்து நன்கு பிசறவும்.
3.பிறகுமிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், எண்ணை சேர்த்து பிசறவும்.
4.சிக்கனை எல்லாமசாலாக்களும் ஒரு சேர பிறட்டியதும் முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
5.நன்கு ஊறிய சிக்கனை எண்ணையை காயவைத்து டீப் பிரை செய்யவும்.
6.நல்ல எலுமிச்சையின் மணத்தில் குழந்தைகளுக்கு பிடித்த லாலி பாப் ரெடி.வும்
குறிப்பு:
1.சிக்கனில் ஒவ்வன்றாக போட்டு விரவுவதால் நன்கு மசாலா பிடிக்கும்.
2.பொரிக்கும் போது எண்ணை சூடானது தீயை மிதமாக வைத்து பொரிகக்வும். அப்போது தான் சிக்கன் நன்கு வேகும்.
3.ஒரு மணி நேரம் ஊறினால் போதும் முன்று மணி நேரம் ஊறினால் இன்னும் நல்ல இருக்கும்.
4.சிக்கனை பல முறையில் பொரிக்கலாம் அதில் இது ஒரு வகை.
5. காஷ்மீரி சில்லி நல்ல கலர் புல்லாக இருக்கும்,காரம் அதிகம் இருக்காது, இது கிடைக்காதவர்கள், சாதா மிளகாய் தூள் சேர்த்து , ரெட் கலர் பொடி சிறிது சேர்த்து கொள்ளலாம்.
Subscribe to:
Posts (Atom)