Monday, April 27, 2009

ஹெல்தி புட்டு

கேழ்வரகு = கால் கப்
கம்பு = கால் கப்
சோளம் = கால் கப்
பட்டாணி = கால் கப்
சிகப்பரிசி = கால் கப்
முந்திரி பாதம் = கால் கப்
கொண்டை கடலை= கால் கப்
சோயா பீன்ஸ் = கால் கப்
பார்லி = கால் கப்

பிரவுன் பர்கல் = கால் கப்
கேரட் துருவியது = தேவைக்கு
துளசி இலைகள் = சிறிது


1. மேற் கூறிய அனைத்து பொருட்களையும் கேரட், துளசி தவிர புட்டு மாவு பதத்திற்கு திரித்து வைத்து கொள்ளவும்.

2. அதிலிருந்து தேவைக்கு ஒரு கப்போ அல்லது இரண்டு கப்போ எடுத்து கலக்கி செய்யவும்.

3. புட்டு அவிக்கும் போது அத்துடன் கேரட், துளசி இலைகளை தூளாக்கி கலந்து அவிப்பதற்கு அரை மணி நேரம் முன்னாதாக புட்டு மாவை ஊறவைகக்வும்.

4. புட்டு மாவு கலக்கும் போது கட்டி இல்லாமல் சாஃப்டாக கலந்து வைக்கவும்.

5. இட்லி பானையில் ஈர துணையை விரித்து அவித்து எடுக்கவும்.

6. குழந்தைகளுக்கு சர்க்க‌ரை, நெய் , தேங்காய் சேர்த்து கலந்து கொடுக்கவும்.

7. பெரியவர்கள் தேவையான அளவிற்கு கொஞ்சம சேர்த்து சாப்பிடவும்.

8. இல்லை கடலை குழம்பு செய்து இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.



குறிப்பு: ரிச் புரோட்டீன், அயர்ன்,பீ காம்ப்லெக்ஸ் அடங்கி உள்ளது இந்த புட்டு மாவில் இவை அனைத்தையும் திரிக்க முடியாதவர்கள் இருக்கும் பொருட்களை மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

Tuesday, April 21, 2009

ஹெல்தி அடை


ஹெல்தி அடை

ப‌ருப்பு வ‌கைக‌ள்
******************

துவரம் பருப்பு = கால் கப்
கடலை பருப்பு = கால் கப்
முழு பாசி பயிறு = கால் கப்
உளுந்து பருப்பு = கால் கப்
பச்சரிசி = கால் கப்
புழுங்கல் அரிசி = கால் கப்
பாசி பருப்பு = கால் கப்
கொண்டை கடலை = கால் கப்

கேழ்வ‌ர‌கு மாவு = ஒரு மேசை க‌ர‌ண்டி
மசாலா
********
இஞ்சி = இரண்டு அங்குல துண்டு
பச்ச மிளகாய் = இரண்டு
காஞ்ச மிளகாய் = இரண்டு
கருவேப்பிலை = அரை கைப்பிடி

சோம்பு = ஒரு தேக்கரண்டி
பூண்டு = இரண்டு

உப்பு = இரண்டு தேக்கரண்டி (அ) தேவைக்கு
வெங்காயம் = ஒன்று பெரியது

கொத்து மல்லி தழை = சிறிது
எண்ணை = சுட தேவையான அளவு


1.பருப்பு வகைகளை தனியகவும், அரிசியை தனியாகவும், பயறு மற்றும் கொண்டைகடலையை தனியாகவும் இரவே ஊறவைக்கவும்.

2.காலையில் முதலில் இஞ்சி பச்ச மிளகாய்,காஞ்ச மிளகாய்,சோம்பு, பூண்டை அரைத்த்து கொண்டு அத்துடன் அரிசியை முதலில் போட்டு அரைக்கவும்.

3.பிறகு கொண்டை கடலை மற்றும் பயறை சேர்த்து அரைகக்வும்.

4.கடைசியாக பருப்பு வகைகளை சேர்த்து அரைத்து அத்துடன் ராகி (கேழ்வரகு மாவை) சேர்த்து கலக்கி உப்பும் சேர்ர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.

5.வெங்காயம் , கொத்துமல்லி தழையை பொடியாக நருக்கி கலந்து தோசை கல்லில் நன்கு பரத்தி எண்ணை விட்டு மொருக விட்டு இரக்கவும்.

இதற்கு தொட்டு கொள்ள வெல்லம், கொத்துமல்லி துவையல் போதுமானது, இல்லை இட்லி மிளகாய் பொடி தொட்டும் சாப்பிடலாம்.நல்ல சூப்பரான மொரு மொரு ஹெல்தி அடை குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்கலாம்

Sunday, April 19, 2009

பீன்ஸ் பருப்பு உசிலி

தேவையான பொருட்கள்

பீன்ஸ் - கால் கிலோ

கடலை பருப்பு - 4 மேசை கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசை கரண்டி
கருவேப்பிலை - ஒரு கை பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு சிட்டிக்கை
உப்பு - ஒன்னே முக்கால் தேக்கரண்டி
மிளகாய் - 12
தாளிக்க
********
எண்ணை - கால் கப்


கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பீன்ஸை பொடியாக அரிந்து கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.
ஊறிய பருப்புடன் காஞ்ச மிளகாய்,கருவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காய பொடி ஒன்னறை உப்பு சேர்த்து கர கரப்பாக அரைகக்வௌம்.

ஒரு வாயகன்ற வானலியில் எண்ணை பாதி ஊற்றி அரைத்த விழுதை போட்டுநன்கு வடஹ்க்கவும்.
பிறகு பீன்ஸ் சேர்த்து சிறிது எண்ணை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக மீதி உள்ள எண்ணையையும் சேர்த்து நன்கு வதக்கி இரக்கவும்.

குறிப்பு
இதை கொத்தவரைகாய்,முட்டை கோசிலும் செய்யலாம், இதில் எண்ணை கொஞ்சம் அதிகமாக இழுக்கும். எப்பவாவது ஒரு முறை செய்து சாப்பிடலாம்.