Tuesday, August 18, 2009

நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

பல பல ப்ளாகுகள் தனியாக வைத்துக்கொண்டு, தனி தனியா போஸ்டிங் செய்ய கஷ்டமாக இருப்பதால், அனைத்தும் ஒன்றாக, இந்த ப்ளாகுக்கு மாற்றி விட்டேன். எல்லோரும் அந்த ப்ளாகில் ஃபாலோவர்ஸாக இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி! http://allinalljaleela.blogspot.com

Monday, August 17, 2009

நோன்பு கஞ்சி






இஸ்லாமிய‌ இல்ல‌ங்க‌ளில் நோன்பு கால‌ங்க‌ளில் செய்யும் க‌ஞ்சியின் சுவைக்கு ஈடு இனை எதுவுமே கிடையாது. நோன்பு திற‌ந்த‌வுட‌ன் ஒரு ப‌வுள் முழுவ‌தும் குடித்தால் ந‌ல்ல‌ என‌ர்ஜி கிடைக்கும்.இதை ப‌ல‌ வ‌கையாக‌ செய்யலாம் அதில் இது குக்க‌ர் முறை, இதில் தாளிப்பு, எண்ணை எல்லாம் குறைத்து செய்தால் நோன்பு நேர‌த்திற்கு ந‌ல்ல‌து.















தேவையான பொருட்கள்.

சிக்கன் (அ மட்டன் கீமா – 100 கிராம்
பாசுமதி அரிசி மிக்சியில் பொடித்த நொய் – முக்கால் டம்ளர்
பச்ச பருப்பு – இரண்டு மேசை கரண்டி (பொங்கலுக்கு போடுவது)
வெங்காயம் – ஒன்று பெரியது
தக்காளி – ஒன்று
தயிர் – ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
கேரட் – அரை துண்டு
பச்ச மிளகாய் – ஒன்று
மிள்காய் தூள் – அரை தேக்காண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
எண்ணை – ஒரு தேக்கரண்டி
நெய் (அ) டால்டா – ஒரு தேக்கரண்டி
தேஙகாய் - இரண்டு பத்தை (அ) தேங்காய் பவுடர் இரண்டு தேக்கரண்டி
பட்டை கிராம்பு, ஏலம் - தலா ஒன்று ஒன்று
வெந்தயம் = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
புதினா – சிறிது







செய்முறை

1. வெங்காயம், தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவேன்டும்.புதினா, கொத்துமல்லி , பச்ச மிளகாயை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி வைக்கவேண்டும். கீமாவை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.கேரட்டை பூ போல் துருவி வைக்க வேண்டும்.அரிசி பருப்பை களைந்து ஊறவைக்க வேண்டும்.

குக்கரில் நெய்+டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை ,கிராம்பு,ஏலத்தை போட்டு பொடிய விட வேண்டும்.

அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை பொட்டு நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.(பச்ச வாடை போகும் வரை)

இப்போது தக்காளி பச்சமிளகாய் போட்டு நன்கு வதக்கவேண்டும்.
தக்காளி சுருண்டதும் கீமா, கேரட், உப்பு,மிள்காய் தூள், கொத்து மல்லி, புதினா,மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவேண்டும்.








தயிர் சேர்த்து கிளறி தண்ணீர் அளந்து ஊற்ற் வேண்டும்.ஒன்றுக்கு நாலு டம்ளர் தண்ணீர் ஊற்றவேணும்.

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் நொயையும் பருபையும் தண்ணீரை வடித்து போடவேண்டும்.
நல்ல கிளறி கிளறி விட்டு கொதிக்க விட வேண்டும்.

குக்கரை மூடி வெயிட் போட்டு தீயை குறைத்து வைத்து முன்று விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விடவேண்டும்.


ஆவி அடங்கிய‌தும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொத்திக்க விட்டு கொத்து மல்லி தழை தூவை இரக்கி சாப்பிடவும்.

சுவையான நோன்பு கஞ்சி தயார்.

இதற்கு தொட்டு கொள்ள பகோடா, பஜ்ஜி,உளுந்து வடை, மற்றும் புதினா துவையல் நல்ல காம்பினேஷன்.

குறிப்பு.

குக்கரில் செய்வதால் கஞ்சியை சூட்டோரு வைக்க அப்படியே குக்கரில் வைக்க கூடாது செய்து முடித்ததும் கிளறி விட்டு வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும்.கஞ்சியை வெளியிலேயே வேக விட்டும் செய்யலாம். கையில் பச்ச குழந்தைவைத்திருப்பவரகள், வேலைக்கு போகிறவர்களுக்கு இந்த முறை ஈசியாக இருக்கும்.வெயிட் போட்டதும் தீயை குறைத்து வைக்கனும். இல்லை என்றால் தெரிக்கும்.கீமா அதிகமா தேவை படுகிறவர்கள் கூட கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள்.
இதை ம‌ட்ட‌ன் கீமா,வெஜ் டேபுள்ஸ் ம‌ட்டும் போட்டு கூட‌ செய்ய‌லாம்.




நொய் என்பது பாதியாக பொடித்த அரிசி.

இது நோன்பு காலத்திற்கு என்று ஒரு கிலோ முக்கால் பதத்திற்கு பொடித்து அதில் பாசி பருப்பு கால் கிலோ, வெந்தயம் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள், பர்கல் இருந்தால் அதுவும் கால் கப் கலந்து வைத்து கொள்ளலாம். தேவைக்கு தினம் ஒரு டம்ளர் அளவிற்கு செட்து குடிக்கலாம், ஒரு டம்ளர் போட்டு செய்தால் நான்கு பேர் தாரளமாக குடிக்கலாம்.

Sunday, August 16, 2009

மட்டன் (அ) பீஃப் பார்பிகியு (கீரின் மசாலா)






தேவையான பொருட்கள்


மட்டன் எலும்பில்லாதது = ஒரு கிலோ
தயிர் ‍= நான்கு மேசை க‌ர‌ண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ‍ இரண்டு மேசை கரண்டி
தக்காளி ‍= ஒன்று பெரிய‌து

பச்ச மிள்காய் = ‍ ஐந்து
மிளகு தூள் = முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = இரண்டு மேசை கரண்டி (அ)(ருசிக்கு)
கொத்து மல்லி தழை ‍= அரை கட்டு (பொடியாக அரிந்தது)
புதினா ‍ = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் ‍= நான்கு மேசை கரண்டி
ஆவிவ் ஆயில் = சுட தேவையான அளவு
லெமன் ‍= முன்று








செய்முறை



1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும், கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய், கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.மிக்சியில் கொத்து மல்லி,புதினா,பச்சமிளகாய்,கருவேப்பிலையை அரைத்து அத்துடன் மிளகுதூள் உப்பு தூள்,மஞ்சள் தூளை சேர்க்கவும்.

தக்காளியையும் அரைத்து சேர்க்கவும்.








3.அரைத்த மசாலாக்களுடன் ,தயிர்,மட்டன் ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை கலக்கவும்.

4.நன்கு கலக்கி ஆலிவ் ஆயிலும் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.







5.ஊறிய கறியை BBQ செய்ய கம்பியில் கோர்க்கவும்.

6.BBQ அடுப்பில் தீ மூட்டி நன்கு நெருப்பானதும் சுடவும்.

7.சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் கறியில் விடவும்.

8.திருப்பி போட்டு மறுபடி சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவிடவும்.






9.நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.

10.சுவையான மட்டன் BBQ ரெடி.


குறிப்பு
இதற்கு கீரின் மாசாலா, மற்றும் ரெட் மசாலா அவரவர் விருப்பபடி எதுவேண்டுமானாலும் போடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள குபூஸ்,கார்லிக் சாஸ், சாலட் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட‌லாம்.

Wednesday, August 5, 2009

லெமன் லாலி பாப் சிக்கன்





தேவையான பொருட்கள்
சிக்கன் லாலி பாப் - 12 பீஸ் (லெக் பீஸ்)
லெமென் - இரண்டு
மிளகாய் தூள் = ஒரு மேசை கரண்டி
உப்பு தூள் - ஒன்னறை தேக்கரண்டி (தேவைக்கு)
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரன்டு தேக்கரண்டி
கார்ன் பிளார்(சோள) மாவு - இரண்டு மேசை கரண்டி
அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணை - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
சோயா சாஸ் - ஒரு தேகக்ரண்டி


செய்முறை


1.சிக்கன் லெக் பீஸை சுத்தமாக கழுவி ஆழமாக இரண்டு கீரல்கள் போட்டு ஒரு எலுமிச்சையில் உள்ள சாறை ஊற்றி பத்து நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.முதலில் லெமென்,உப்பு,கார்ன் மாவு சேர்த்து நன்கு பிசறவும்.

3.பிறகுமிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் தூள், எண்ணை சேர்த்து பிசறவும்.

4.சிக்கனை எல்லாமசாலாக்களும் ஒரு சேர பிறட்டியதும் முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

5.நன்கு ஊறிய சிக்கனை எண்ணையை காயவைத்து டீப் பிரை செய்யவும்.

6.நல்ல எலுமிச்சையின் மணத்தில் குழந்தைகளுக்கு பிடித்த லாலி பாப் ரெடி.வும்


குறிப்பு:


1.சிக்கனில் ஒவ்வன்றாக போட்டு விரவுவதால் நன்கு மசாலா பிடிக்கும்.
2.பொரிக்கும் போது எண்ணை சூடானது தீயை மிதமாக வைத்து பொரிகக்வும். அப்போது தான் சிக்கன் நன்கு வேகும்.
3.ஒரு மணி நேரம் ஊறினால் போதும் முன்று மணி நேரம் ஊறினால் இன்னும் நல்ல இருக்கும்.
4.சிக்கனை பல முறையில் பொரிக்கலாம் அதில் இது ஒரு வகை.
5. காஷ்மீரி சில்லி நல்ல கலர் புல்லாக இருக்கும்,காரம் அதிகம் இருக்காது, இது கிடைக்காதவர்கள், சாதா மிளகாய் தூள் சேர்த்து , ரெட் கலர் பொடி சிறிது சேர்த்து கொள்ளலாம்.

Saturday, July 11, 2009

முட்டை மூளை வதக்கல்



தேவையான‌ பொருட்க‌ள்



ஆட்டு மூளை = இரண்டு
முட்டை = இரண்டு
வெங்காயம் = நான்கு
தக்காளி ‍= ஒன்று பொரியது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி
ரெட் க‌லர் ப‌ச்ச‌மிள‌காய் = முன்று
மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = ஒரு தேக்க‌ர‌ண்டி (ருசிக்கு)
ப‌ட்டை = ஒரு சிறிய‌ துண்டு
க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை ‍= ஆறு தேக்க‌ர‌ண்டி
கொத்து ம‌ல்லி த‌ழை = கால் கை பிடி

செய்முறை

1.சூடான‌ வெண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி மூளையை போட்டு மேலே உள்ள‌ மெல்லிய‌ தோலை மூளை உடையாம‌ல் பிரித்து எடுத்து ந‌ன்கு க‌ழுவி எடுத்து த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.

2.முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.

3. மூளையில் கால் தேக்க‌ர‌ண்டி,உப்பு கால் தேக்க‌ர‌ண்டி, சிறிது மிள‌காய் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.

4.ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை முன்று தேக்க‌ர‌ண்டி அள‌விற்கு ஊற்றி காய‌வைத்து ப‌ட்டையை போட்டு வெடிக்க‌விட்டு வெங்காய‌த்தை பொடியாக‌ அரிந்து சேர்க்க‌வும்.

5.வெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வாடை போக‌ வ‌த‌க்கி சிறிது கொத்தும‌ல்லி த‌ழை சேர்த்து த‌க்காளியை பொடியாக‌ அரிந்து சேர்த்து , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.

6. இப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.

7. க‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌ற்ப‌க‌க்மும் பிர‌ட்டு வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி ப‌ச்ச‌மிள‌காய், கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இர‌க்க‌வும்.

8. சுவையான‌ முட்டை மூளை வ‌த‌க்க‌ல் ரெடி.ஆட்டு பாட்ஸில் மூளையை ப‌ல‌ வித‌மாக‌ செய்ய‌லாம், அப்படியே முழுசாக வ‌றுத்தும் எடுக்க‌லாம்.

இதை ஐந்து பேர் சாப்பிடலாம்.

Wednesday, July 8, 2009

கோதுமை பூரியும் பாஜியும்






கோதுமை பூரி

தே.பொருட்கள்
கோதுமை மாவு = கால் கிலோ
பட்டு போல் உள்ள ரவை = 25 கிராம்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = ஒரு தேக்கரண்டி
தண்ணீர் = ஒரு டம்ளர்
எண்ணை = இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  • கோதுமைமாவில் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எண்ணை தவிர போட்டு குழைக்கவும்.

  • குழைக்கும் போது இடையில் ஒரு தேக்கரண்டி எண்ணையும், கடைசியில் ஒருதேக்கரண்டி எண்ணையும் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.

  • தண்ணீர் முதலில் முக்கால் டம்ளர் ஊற்றி குழைக்கவும், பிறகு தேவைக்கு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து குழைக்கவும்.
பாஜி

தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு = கால் கிலோ
வெங்காயம் = முன்று
த‌க்காளி = ஒன்று
மிள‌காய் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி
உப்பு = முக்கால் தேக்க‌ர‌ண்டி
இஞ்சி = ஒரு தேக்க‌ர‌ண்டி (பொடியாக‌ அரிந்த‌து)
ப‌ச்ச‌ மிள‌காய் = முன்று (இர‌ண்டாக‌ ஒடித்து கொள்ள‌வும்)
கடுகு = அரை தேக்கரண்டி
முந்திரி = முன்று (பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும்)
உளுந்த‌ம் ப‌ருப்பு = அரை தேக்க‌ர‌ண்டி
கருவேப்பிலை = சிறிது
எண்ணை = நான்கு தேக்க‌ர‌ண்டி

செய்முறை

  • பூரிக்கு மாவு குழைக்கும் முன் உருளை கிழ‌ங்கை வேக‌ போட‌வும்.
  • உருளை கிழ‌ங்கை ந‌ன்கு ம‌ண் போக‌ க‌ழுவி இர‌ண்டாக‌ வெட்டி அதில் கால் தேக்க‌ர‌ண்டி உப்பு, கால் தேக்க‌ர‌ண்டி சேர்த்து மூழ்கும் அள‌விற்கு த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் நான்கு ஐந்து விசில் விட்டு இர‌க்க‌வும்.ஆறியதும் தோலை உறித்து மசித்து வைக்கவும்.
  • ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணையை காய‌வைத்து அதில் க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு, முந்திரி,க‌ருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காய‌ம் சேர்த்து வ‌த‌க்க‌வும்.
  • வெங்காய‌ம் வ‌த‌ங்கிய‌தும் த‌க்காளியை ஆறாக‌ அரிந்து சேர்த்து ப‌ச்ச‌மிள‌காய், இஞ்சியை சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்க‌வும்.

  • பிற‌கு மிள‌காய் தூள்,கால் தேக்க‌ர‌ண்டி ம‌ஞ்ச‌ள் தூள் , உப்பு அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து இர‌ண்டு நிமிட‌ம் வ‌த‌ங்க‌ விட‌வும்.
  • ம‌சித்த‌ உருளையை சேர்த்து கிள‌றி கால் ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து முடி போட்டு சிறிது நேர‌ம் சிறு தீயில் விட‌வும்.க‌டைசியாக‌ கொத்து ம‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.
    குறிப்பு:

பூரி பாஜி என்ப‌து ரொம்ப‌சுல‌ப‌ம் தான் பல‌ வ‌கைக‌ளில் செய்ய‌லாம்.மைதாவில் செய்தால் உட‌னே சுட‌ சுட‌ சாப்பிட‌னும்.இது கோதுமையில் செய்வ‌தால் ப‌ள்ளிக்கோ ஆபிஸுக்கோ க‌ட்டி கண்டு போக‌லாம்.பூரியை எண்ணை ந‌ன்கு காய்ந்த‌தும் தீயின் அள‌வை மீடிய‌மாக‌ வைத்து சுட‌வும்.ஒரே சீராக‌ தேய்த்து போட‌னும். எண்ணையில் போட்ட‌தும் சும்மா சும்மா போட்டு கிண்ட‌க்கூடாது.ஒரு ப‌க்க‌ம் வெந்த‌தும் , உட‌னே ம‌றுப‌க்க‌ம் திருப்பி பொங்கி வ‌ரும் போது எடுத்து விட‌வேண்டும்.









குழந்தைகளுக்கு, ஆபிஸுக்கும் கட்டி கொடுக்கும் போது இப்படி ஓவ்வொரு பூரியிலும் பாஜியை தடவி மடக்கிவைத்தால் சாப்பிட ஈசியாக இருக்கும்.
(இந்த அயிட்டம் என் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பேவரிட் .முன்று பேரும் முன்று விதமா சாப்பிடுவர்கள். பெரியவர் பூரிக்கு பொட்டுகடலை துவையல், சின்னவர் பூரி சாம்பார் , எங்க அத்தானுக்கு பூரி பாஜி ரொம்பவே பேவரிட்) ஆபிஸ் கொண்டு போன பக்கத்து டேபுள் அரபிகளுக்கு கூட மூக்கை துளைத்து கேட்டு சாப்பிடுவார்கள்.)இந்த‌ பூரிக்கு மீன் குழ‌ம்பு, பீஃப் பிரை,ம‌ட்ட‌ன் குருமா, ம‌ட்ட‌ன் கூட்டு எல்லாம் ந‌ல்ல‌ இருக்கும்.





















Saturday, July 4, 2009

கிட்னி பிரை

கவனிக்க‌
என்னுடைய அனைத்து குறிப்புகளும் அருசுவைடாட்காமில் உள்ளது.சில ரெசிபிக்கள் மட்டும் இதில்
http://arusuvai.com/tamil/experts/3475 - jaleela

///இது ஆட்டு பாட்ஸில் இது கிட்னி பிரை ( ஈரல் என்பது வேறு) இது ஏற்கனவே பிரபல வெப் சைட்டில் வேறு ஒரு முறையில் கொடுத்துள்ளேன்.
சாப்பிட வாங்க‌
இந்த முறை சமையலறைடாட் காமில் மார்ச் மாதம் கொடுத்தேன், ஆனால் இந்த குறிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது,
இது எல்லாருடைய வெப் சைட் மூக்கையும் துளைத்து விட்டது/
ஆளுக்காள் அவரவர் வெப் சைட்டில் காப்பி செய்து போட்டு இருக்கிறார்கள், பிரபல மாத இதழ் ஒன்றிலும் வெளியாகி உள்ளது.
அதில் என் பிளாக்கிலும் நான் போட்டு கொள்கிறேன். செய்து ருசிக்க்கவும் சூப்பரான குழந்தைகளின் ஸ்மால் சிக்கன்.)கிட்னி பிரை...


தேவையான பொருட்கள்


ஆட்டு கிட்னி - கால் கிலோ
உப்பு தூள் - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பொடி - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - முக்கால் தேக்கரண்டி
கொத்து மல்லி தழை - சிறிது
புதினா - முன்று இதழ்
பச்ச மிளகாய் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பட்டை - சிறிய துண்டு (கால் இன்ச் அளவு)
கரம் மசாலா தூள் - ஒரு பின்ச்
தக்காளி ஒன்று - சிறியது

எண்ணை - இரண்டு தேக்கரண்டி
நெய் - கால் தேக்கரண்டி

செய்முறை

1. முதலில் கிட்னியை நடுவில் இருக்கும் கொழுப்பை மட்டும் அகற்றி விட்டு இரு முறை கழுவி மஞ்சள் தூள் சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைக்கவும்.

2. பிறகு மறுபடி இருமுறை கழுவி தண்ணீரை வடிய விடவும்.
கிட்னியில் உப்பு , இஞ்சி பூண்டு பேஸ்ட், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும், தக்காளியை நான்கு துண்டாக அரிந்து போடவும்.

3. கலக்கியதை ஐந்து நிமிடம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் சேர்க்க வேண்டாம் முன்று விசி விட்டு இரக்கவும்.

4. இப்போது அதில் நிறைய தண்ணீர் நிற்கும் அதை வற்ற விடவும்.

5. தனியாக ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றி பட்டை,வெங்காயம் மீடியமாக அரிந்து சேர்த்து தாளித்து வற்றிய கிட்னியை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து கொத்துமல்லி, புதினா, நெய்,சேர்த்து கரம் மசாலா, தூவி கிளறி இரக்கவும்.

6. சுவையான கிட்னி பிரை ரெடி

குறிப்பு

இதை சரியாக கழுவ வில்லை என்றால் செய்யும் போது ஸ்மெல் வரும், ரொம்ப நேரம் வேக விட்டால் ரொம்ப கல்லு மாதிரி ஆகிடும்.
இதை குக்காரில் வேக வைத்து செய்வதால் குழந்தைகளுக்கு கடித்து சாப்பிட ஈசியாக இருக்கும்.
குழந்தைகளுக்கு இதை ஸ்மால் சிக்கன் என்று சொல்லி கொடுங்கள்.
காஷ்மீரி சில்லி பொடி என்பது நல்ல கலராக இருக்கும் காரம் அவ்வள்வாக இருக்காது.
அது கிடைக்க வில்லை என்றால் சாத மிளகாய் தூளே போதுமானது.
இதே போல் மிளகு சேர்த்தும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு,பிள்ளை பெற்றவர்களுக்கு நெயிலேயே கூட செய்து கொடுக்கலாம்,