Saturday, June 27, 2009

கேசரி உருண்டை





இந்தியாவில் பெண் பார்க்கும் விஷேஷத்தில் இந்த சொஜ்ஜி , பஜ்ஜி இல்லாமல் இருக்காது.



இது சாதரணமான கேசரி (சொஜ்ஜி)தான், இந்த முறையில் செய்தால் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


வீட்டில் அடிக்கடி செய்ய நெய் , பட்டரின் அளவை குறைத்துக்கொள்ளலாம்.










தேவையான பொருட்கள்

ரவை = ஒரு கப்
பட்டர் = கால் கப்
சர்க்கரை = ஒரு கப்
நெய் = இரண்டு தேக்கரண்டி
பாதம், முந்திரி = ஐந்து
கிஸ்மிஸ் பழம் = ஆறு
ரெட் கலர் பொடி = இரண்டு பின்ச்









செய்முறை

நெயில் பாதம் ,முந்திரி பொடியாக அரிந்து,கிஸ்மிஸ் சேர்த்து கருகாமல் வறுத்து தனியாக வைக்கவும்.

பட்டரை உருக்கி அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

அதற்குள் பக்கத்து அடுப்பில் ரவை ஒரு கப்பிற்கு இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து அதில் கலர் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதித்ததும் வறுத்து கொண்டிருக்கும் ரவையில் கொட்டி கை விடாமல், கட்டி தட்டாமல் ஊற்றி கிளறவும்.

ரவை சிறிது கெட்டியாகி வரும் போது சர்க்கரை கொட்டி கிளறி, வறுத்த முந்திரி,பாதம்,கிஸ்மிஸ் ஐ கலந்து இரக்கவும்.

ஆறியதும் அதை உருண்டைகளாக பிடித்தோ (அ) டைமண்ட் ஷேப்பிலோ கட் பண்ணவும்.

குறிப்பு

இப்படி செய்வதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.முந்திரி பாதத்தை பொடித்தும் போட்டு உருண்டைகளாக பிடிக்கலாம்.

Thursday, June 25, 2009

முன்று வகையான ராகி (கேழ்வரகு)சமையல்கள்


ராகி சேமியா புட்டு



தேவையான பொருட்கள்

ராகி சேமியா = கால் கிலோ
தேங்காய் = அரை மூடி
நெய் = ஒரு மேசை கரண்டி
சர்க்கரை = 200 கிராம்

செய்முறை

1. ராகி சேமியாவை லேசான வெண்ணீரில் போட்டு ஒரு நிமிடத்தில் வடிகட்டி விடவேண்டும்.
2.அதை இட்லி பானையில் ஈரதுணியை விரித்து அவித்து எடுக்கவும்.
3. அதில் நெய்யை உருக்கி ஊற்றி, சர்க்கரை சேர்த்து தேங்காயை துருவி சேர்த்து நன்கு கலக்க்கவும்.
சுவையான ராகி சேமியா புட்டு ரெடி.
குழந்தைகள் இனிப்பு நுடுல்ஸ் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.






ராகி சேமியா உப்புமா












தேவையான‌ பொருட்க‌ள்

ராகி சேமியா = 100 கிராம்
தாளிக்க‌
எண்ணை = இரண்டு தேக்கரண்டி
கடுகு = கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
கருவேப்பிலை = சிறிது
ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று
காஞ்ச‌ மிள‌காய் ‍= ஒன்று
எலுமிச்சை சாறு = அரை தேக்க‌ர‌ண்டி

செய்முறை

1. வெண்ணீரை கொதிக்க‌ விட்டு அதில் ராகி சேமியாவை போட்டு நூடுல்ஸ் செய்வ‌து போல் இர‌ண்டு முன்று நிமிட‌த்திற்குள் வ‌டித்து விட‌வும்.
2 .பிற‌கு வாய‌க‌ன்ற‌ வான‌லியில் எண்ணை காய‌வைத்து க‌டுகு, காஞ்ச‌ மிள‌காய், உளுத்த‌ம் ப‌ருப்பு, பூண்டு, வெங்காய‌ம், க‌ருவேப்பிலை போட்டு தாளித்து ப‌ச்ச‌மிள‌காயை இர‌ண்டாக‌ கீறி போட‌வும்.
3. வ‌டித்து வைத்துள்ள‌ ராகியை சேர்த்து கிள‌றி எலுமிச்சை சாறு சேர்த்து இர‌க்க‌வும்.ட‌யாப‌ட்டீஸ் பேஷ‌ன்ட்டுக‌ளுக்கு ஏற்ற‌ உண‌வு இது.
இதை சிக்க‌ன் ம‌ட்ட‌ன் சேர்த்து காய்க‌ள் சேர்த்து செய்து சாப்பிட‌லாம்.





















ராகி கஞ்சி (பானம்)

நான்கு மாத கை குழந்தை முதல் வயதான பெரியவர்கள் வரை குடிக்கும் சத்தான பானமாகும்.உடல் சேர்வை நீக்கும், பசி தாங்கும் பானமும் ஆகும்.

தேவையான பொருட்கள்

ராகி பவுடர் = இரண்டு மேசை கரண்டி
பால் = இரண்டு டம்ளர்
தண்ணீர் = முன்று டம்ளர்
சர்க்கரை = 10 தேக்கரண்டி
ஏலக்காய் = முன்று
சாப்ரான் (குங்கும பூ) = கால் தேக்கரண்டி
நெய் = கால் தேக்கரண்டி


முதலில் ராகி பவுடரில் பாதி அளவு தண்ணீர் விட்டு கலக்கி டீ வடிகட்டி கொண்டு வடிக்கட்டவும்.
மீண்டும் அந்த வடித்த கப்பியில் மீதி தண்ணீரை ஊற்றி வடிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும்.
ராகி வெந்து கஞ்சி பதத்திற்கு வரும் போது பால் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு அதில் சாப்ரானை தூவி நெய் உருக்கி ஊற்றி இரக்கவும்.

குறிப்பு

கை குழதைகளுக்கு பால் சேர்க்காமல் மெல்லிய வெள்ளை மல் துணியில் ஆறிய வெண்ணீரில் கலக்கி வடித்து பிறகு காய்ச்சி கொடுக்கவும்.
ஆறு மாதத்திற்கு பிறகு என்ன பால் பார்முலா மில்க் சேர்ந்து காய்ச்சி கொடுக்கலாம்.
எட்டு மாதத்திலிருந்து ராகியுடன் பொட்டுகடலை,கோதுமை,அரிசி, ஜவ்வரிசி, பாதம் எல்லாம் சேர்த்து மிஷினில் கொடுத்து திரித்து காய்ச்சி கொடுக்கலாம், குழந்தைகளுக்கு தெம்பையும் புஷ்டியையும் கொடுக்கும்.
முழு ஏலக்காயிக்கு பதில் பொடியும் சேர்த்து கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு ஒரிரு இதழ் சாப்ரான் போட்டு காய்ச்சி விட்டு பிறகு அதை எடுத்து விட்டு கொடுக்கவும்.
சில குழந்தைகளுக்கு வாயில் தட்டினால் வாமிட் வரும்.
வயதானவர்கள் நெய் சேர்க்காமல் கொஞ்சமா சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்.இதை கூழ் போல கட்டியாக காய்ச்சியும் ஸ்பூனால் ஊட்டி விடலாம்.
ரொம்ப மாவை அள்ளி போட்டு சரியாக வேக வில்லை என்றால் பிள்ளைகளுக்கு பிடிக்காது.காலையிலிருது மதியத்துக்கும் கொடுக்கனும், மாலை இரவு வேண்டாம்.
(வயலில் ஏர் உழபவன் ஒரு கோப்பை கேப்பங்கஞ்சியை (ராகியை) குடித்து விட்டு தான் ஏர் உழுகிறான்). உடலுக்கு அவ்வளவு தெம்பை கொடுக்கும்.
குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் போது சாப்பிட வில்லையே என்று கவலை பட தேவையில்லை, இது ஒரு டம்ளர் கொடுத்தால் போதும் நிம்மதியா இருக்கலாம்.





Wednesday, June 24, 2009

அவசர மாங்காய் ஊறுகாய்





இதுக்கு புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கிளிமூக்கு மாங்காயாக இருந்தால் நல்ல இருக்கும்.


ஒரு பெரிய மாங்காய் = ஒன்று
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு

வறுத்து பொடிக்க
காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் ‍ = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க‌
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் ‍= ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்

1 . வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கொஞ்சமா எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ள‌வும்.
2. மாங்காய‌யை பொடியாக‌ அரிந்து கொள்ள‌வும், கொட்டையை தூக்கி போட்டுவிட‌ வேண்டாம் அதை சாம்பார் (அ) மீன் குழ‌ம்பில் போட்டு கொள்ள‌லாம்.
3. ஒரு வான‌லியில் எண்ணை விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளிக்க‌வும்.
4. மாங்காயை போட்டு கிள‌ற‌வும். உப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து பொடித்த‌ பொடியையும் போட்டு ந‌ன்கு பிற‌ட்டி ஐந்து நிமிட‌ம் வேக‌விட்டு க‌டைசியாக‌ வெல்ல‌த்தை தூவி இர‌க்க‌வும்.

செய்யும் போதே நாவில் நீர் ஊற‌ ஆர‌ம்பித்து விடும்.
அப்ப‌டியே இர‌ண்டு முன்று நாட்க‌ளில் சாப்பிட்டு முடிக்க‌ வேண்டிய‌து தான். க‌ரிபிணி பெண‌க‌ள் வாய்க்கு ருசிப‌டும், ஏன் ந‌ம‌க்குதான்.
குறிப்பு
வ‌றுத்து பொடிக்க‌ சோம்பேறி த‌ன‌மா அப்ப‌டியே எண்னையில் போட்டு தாளிக்க‌வும், மிள‌காய் தூள் ஒரு தேக‌க்ர‌ண்டி, வெந்த‌ய‌ பொடி (அ) வெந்த‌ய‌ம், தாளித்தும் எண்ணையில் போட்டு விட்டு பிற‌கு மாங்காயை போட்டு பிற‌ட்ட‌வும், க‌ல‌ரும் சூப்ப‌ராக‌ வ‌ரும்.

Monday, June 22, 2009

KFC லாலிபாப்





///இப்போது குழ‌ந்தைக‌ள் அதிக‌மாக‌ விரும்புவ‌து KFC சிக்க‌ன் தான் அந்த‌ அள‌விற்கு சுவை இல்லை என்றாலும் ஓர‌ள்விற்கு ந‌ல்ல‌வே இருக்கும். வெரும் ப‌ருப்பு சாத‌த்திற்கும் ந‌ல்ல‌ இருக்கும்.//


தேவையான‌ பொருட்க‌ள்



ஊறவைக்க


லெக் பீஸ் - எட்டு துண்டு
இஞ்சி - இரண்டு அங்குல துண்டு
பூண்டு - ஐந்து பல்
தக்காளி = அரை
வெங்காயம் - அரை
உப்பு - தேவைக்கு
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி

பிரட்டி கொள்ள


மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மைதா - அரை கப்
கார்ன் மாவு - கால் கப்
உப்பு - சிறிது
எண்ணை பொரிக்க தேவையாண அளவு

செய்முறை


1. சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வைக்கவும்.
2. வெங்காயம் இஞ்சி பூண்டு தக்காளி அனைத்தையும் அரைத்து அதில் உப்பு பேக்கிங்க் பவுடர் சேர்த்து சிக்கனில் ஊற்றி நன்கு பிசறி , முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி முன்று மணி நேரம் ஊறவைக்கவும்

3. மைதா, கார்ன் மாவில் மிளகாய்தூள் மற்றும் உப்பை கலந்து ஊறிய சிக்கனை தண்ணீரை வடித்து இதில் பிரட்டி பொரித்தெடுக்கவேண்டும்.


4.பொரிக்கும் போது தீயை மீடியமாக வைத்து மூடி போட்டு நன்கு வெந்ததும் தீயை ஹயில் வைத்து பொரித்தெடுக்கவும்.
5. எண்ணையுடன் சிறிது பட்டர் சேர்த்து பொரித்தால் இன்னும் நல்ல இருக்கும்.

Saturday, June 20, 2009

கொத்து மல்லி கருவேப்பிலை ரசம்






//உணவு உண்ட பின் செரிமானத்துக்கு ரசம் ஒரு அருமையான உணவு, இதில் ரசத்தில் தாளிக்கும் கருவேப்பிலை மற்றும் கடைசியாக மேலே தூவும் கொத்து மல்லி புதினா கொண்டு தயாரிக்கும் விதம்.
கொத்தும‌ல்லி கீரை ந‌ம‌து உட‌லில் ர‌த்த‌தை சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து, கர்பிணி பெண்களின் வாய்க்கு ருசி ப‌டும், க‌ருவேப்பிலையை (முடி வ‌ள‌ர , முடி கொட்டும்பிரச்சனைக்கு) தேங்காய் எண்ணை (அ) ந‌ல்லெண்ணையில் காய‌வைத்து பொடித்து த‌லைக்கு தேய்பார்க‌ள், அதை உண‌வாக‌ உட்கொள்வ‌த‌ன் கூடுதல் பலன் .கிடைக்கும்.
ஜுர‌ம் வ‌ந்து வாய் க‌ச‌ப்பாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு செய்து கொடுத்தால் வாய்க்கு ருசி ப‌டும். க‌ல்யாண‌ விட்டில் பிரியாணி சாப்பிட்டு இரவு வெரும் ர‌ச‌ம் சாதம், மாசி தொட்டு கூட சாப்பிட‌லாம். //


தேவையான‌ பொருட்க‌ள்
****************************
புளி = ஒரு சிறிய‌ ஒன்ன‌றை எலுமிச்சை அளவு
உப்பு = ருசிக்கு
ரசப்பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

அரைத்து கொள்ள‌
***************** *
ந‌ன்கு ப‌ழுத்த‌ த‌க்காளி = ஒன்று
கொத்தும‌ல்லி = ஒரு கைப்பிடி
க‌ருவேப்பிலை = ஒரு கைப்பிடி
மிள‌கு = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
பூண்டு = நான்கு ப‌ல்
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்தயம் = 5 எண்ணிக்கை
பெருங்காய‌ம் = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = 5 இதழ்
கொத்து ம‌ல்லி சிறிது


செய்முறை


1.புளியை க‌ழுவி சுடுத‌ண்ணீரில் க‌ரைத்து முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வைக்க‌வும்.


2. கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலையை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.


3. இப்போது அரைக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை அரைத்து கொண்டு அத்துட‌ன் த‌க்காளி, பூண்டு, கொத்தும‌ல்லி, ப‌ச்ச‌மிள‌காய், க‌ருவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை சேர்த்து அரைத்து (அரைத்த‌து + மிக்சியில் இருந்து வ‌ழித்தெடுத்த‌து) இர‌ண்டு ட‌ம்ள‌ர் அள‌வு.


4. இப்போது க‌ரைத்து வைத்திருக்கும் புளி த‌ண்ணீருட‌ன் அரைத்த‌ க‌ல‌வை, ர‌ச‌ப்பொடி, உப்பு,ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.


5. இப்போது தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை க‌ரிகாம‌ல் தாளித்து கொதித்து வைத்திருக்கும் க‌ல‌வையில் ஊற்றி கொத்தும‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.


6. க‌ம‌ க‌ம‌ன்னு கொதிக்கும் போது உங்க‌ள் ர‌ச‌ம் வாசனை எட்டு வீட்டு மூக்கை துளைக்கும்.


குறிப்பு
ர‌சத்தை ப‌ல‌வ‌கையாக‌‌ வைக்க‌லாம். த‌க்காளி ர‌ச‌ம், அரைத்து விட்ட‌ ர‌ச‌ம்,தேங்காய் பால் ர‌ச‌ம், எலுமிச்சை ர‌ச‌ம், அன்னாச்சி ப‌ழ‌ ர‌சம்.
வாங்கும் ஊட்டி புளிப்பா போச்சா க‌வ‌லை வேண்டாம் அதிலும் ர‌ச‌ம் த‌யாரிக்க‌லாம்.இதில் ஒரு சிறிய‌ பிட்டு வெல்ல‌ம் போட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இது சுமார் ஆறு பேர் சாப்பிட‌லாம்

Tuesday, June 16, 2009

சைனா கிராஸ் (கடற்பாசி)







கடற் பாசி என்னும் சைனா கிராஸ் இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உனவு களில் இதுவும் ஒரு வகையாகும்.
கடற்பாசியை ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பால் சேர்த்தும் செய்யலாம், இரண்டு வகையான கலர் சேர்த்து தனித்தனியாக செய்து கலந்து கலர்புல்லாகவும் செய்யலாம்,இளநீரில் (அ) தேங்காய் உடைத்த தண்ணீரிலும் செய்யலாம், ஜூஸுக்கு கரைக்கும் டேங்கிலும் செய்யலாம்.


1. ரூ ஆப்ஷா கடற்பாசி





ரூ ஆப்ஷா என்பது பாக்கிஸ்தானியர்கள் பயன் படுத்துவது இது பாலில் கரைத்து குடிக்கும் பானம் இது உடல் சூட்டை தணிக்கும், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.


க‌ட‌ற்பாசி = ஒரு கைபிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அள‌வு
பால் = ஒரு ட‌ம்ள‌ர்
ரூ ஆப்ஷா = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி
பாத‌ம் = நான்கு


அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை பொடியாக‌ அரிந்து போட்டு சிறிது நேர‌ம் ஊற‌வைத்து காய்ச்ச‌வும்.
க‌ரைந்து வ‌ரும் ச‌மைய‌த்தில் அதில் பாலை ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக‌க் விட்டு வ‌டிக‌ட்ட‌வும் ந‌ல்ல‌ க‌ரைந்து விட்டால் வ‌டிக‌ட்ட‌ தேவையில்லை.அதில் ரூ ஆப்ஷாவை க‌ல‌ந்து ஒரு த‌ட்டில் ஊற்றி அத‌ன் மேல் பாத‌த்தை தோலெடுத்து பொடியாக‌ அரிந்து தூவி விட்டு ஆற‌வைத்து பிரிட்ஜில் வைத்து குளிற‌விட‌வும்.ந‌ன்கு ஆறி செட்டான‌தும் வேண்டிய‌ வ‌டிவில் துண்டுக‌ள் போட்டு சாப்பிட‌வும்.

இள‌நீர் க‌ட‌ற்பாசி

இள‌நீர் = ஒன்று முழுவ‌தும்
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசை க‌ர‌ண்டி
தேவையான‌ ந‌ட்ஸ் = 4 பாத‌ம் (அ) பிஸ்தா, முந்திரி ‍
க‌ட‌ற் பாசி = ஒரு கை

க‌ட‌ற்பாசியை அரை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் பொடியாக‌ அரிந்து போட்டு ஊற‌வைத்து ந‌ன்கு க‌ரையும் வ‌ரை காய்ச்சி சர்க்கரை சேர்த்து இள‌நீரை ஊற்றி உட‌னே அடுப்பை அனைக்க‌வும்.ஒரு டிரே (அ) த‌ட்டில் ஊற்றி மேலே ந‌ட்ஸ் வ‌கைக‌ளை தூவி ஆற‌வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.
இது சாப்பிட‌ சாப்பிட‌ நிறைய‌ சாப்பிட‌னும் போல் தோன்றும் அவ்வ‌ள‌வு ருசியாக‌ இருக்கும்.

டேங்க் க‌ட‌ற்பாசி
க‌ட‌ற்பாசி = ஒரு கை பிடி அள‌வு
ச‌ர்க்க‌ரை = ஒரு மேசைக‌ர‌ண்டி அள‌வு
ஏதாவ‌து ஒரு பிளேவ‌ர் டேங்க் ப‌வுட‌ர் = இர‌ண்டு மேசை க‌ர‌ண்டி அளவு
த‌ண்ணீர் = இர‌ண்டு ட‌ம்ள‌ர்
ஒன்ன‌றை ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ட‌ற்பாசியை க‌ரைத்து ஊற‌வைத்து ச‌ர்க‌க்ரை சேர்த்து ந‌ன்கு காய்ச்ச‌வும்.
ந‌ன்கு க‌ரைந்து வ‌ரும் போது டேங்க் ப‌வுட‌ரை க‌ல‌ந்த்து ஊற்றி ஒரு டிரேயில் ஊற்றி தேவையான நட்ஸ் வகையை ஊற்றி ஆற‌விட‌வும்.
ஆறிய‌தும் பிரிட்ஜில் வைத்து குளிற‌வைத்து சாப்பிட‌வும்.




Saturday, June 13, 2009

த‌க்காளி ம‌ற்றும் வெங்காய‌ ப‌ஜ்ஜி















தே.பொருட்க‌ள்

கடலை மாவு = அரை டம்ளர்
அரிசி மாவு = கால் டம்ளர்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் = தேக்கரண்டி
உப்பு தூள் = தேவைக்கு
காஷ்மீரி சில்லி பொடி = அரை தேக்கரண்டி
ரெடி கலர் பொடி = பின்ச்
எண்ணை = ப‌ஜ்ஜி சுட‌ தேவையான‌ அள‌வு
ரெட் க‌ல‌ர் த‌க்காளி = இர‌ண்டு


செய்முறை

1. த‌க்காளியை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ க‌ட் செய்து வைக்க‌வும்.


2. ப‌ஜ்ஜி க‌ல‌க்க‌ தேவையான‌ பொருட்க‌ளை ஒன்றாக‌ சேர்த்து த‌யிர் ப‌த‌த்திற்கு க‌ல‌க்கி ஐந்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.


3. எண்ணை காய்ந்த‌தும் ப‌ஜ்ஜிக‌ளாக‌ சுட்டெடுக்க‌வும்.
புளிப்பு சுவையுட‌ன் கூடிய‌ வித்தியாச‌மான‌ த‌க்காளி ப‌ஜ்ஜி ரெடி.


குறிப்பு
ப‌ஜ்ஜி வெங்காய‌ ப‌ஜ்ஜி சில‌ருக்கு எடுத்து தோய்த்து போடும் போது பிஞ்சி போய் விடும் அதுக்கு, வெங்காய‌த்தை வ‌ட்ட‌வ‌டிவ‌மாக‌ வெட்டி சிறிது நேர‌ம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பிற‌குதோய்த்தால் கொஞ்ச‌ம் கிரிப்பாக‌ நிற்கும்.
மிள‌காய் ப‌ஜ்ஜி ரொம்ப‌ கார‌மாக‌ இருந்தால் சிறிது உப்பு, வினிக‌ர் சேர்த்து ஊற‌வைத்து பிற‌கு சுட்டால் கார‌மும் தெரியாது, சுவையும் வித்தியாச‌மாக‌ இருக்கும்.








ப‌ஜ்ஜி ரொம்ப‌ ஈசியா த‌யாரித்து விட‌லாம். இதை வாழைக்காய், உருளை,முட்டை,அப்ப‌ளம், வெங்காயாம்,க‌த்திரிக்காய்,வெங்காய‌ம்,பேபிகார்ன் எலாவ‌ற்றிலும் இதை த‌யாரிக்க‌லாம்.க‌ட‌லை மாவு கேஸ் என்ப‌தால் அதில் சோம்பு (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பூண்டு பொடி (அ) பொருங்காய‌ப் பொடி அவ‌ர‌வ‌ர் விருப்ப‌த்திற்கு ஏற்றவாறு போட்டு கொள்ள‌லாம்.இல்லை எல்லாமே ஒரு பின்ச்சும் போடலாம்.
காய்க‌றி சாப்பிட‌தா குழ‌ந்தைக‌ளுக்கு இது போல் செய்து கொடுக்க‌லாம்.வீட்டில் உள்ள‌ காயை வைத்து நினைத்தால் நிமிஷ‌த்தில் த‌யாரித்து விட‌லாம்.
இத‌ற்கு தொட்டு கொள்ள‌ பொட்டு க‌ட‌லை துவைய‌ல், கெட்ச‌ப்,பேரிட்சை ச‌ட்னி , புதினா துவையல் எல்லாமே ந‌ல்ல‌ இருக்கும்.

Wednesday, June 10, 2009

முன்று வகையான இனிப்புமுட்டை தோசைகள்






வித விதமான தோசைகள்.

1. ஆட்டா மாவு இனிப்பு தோசை
*****************************************

கோதுமைமாவு (ஆட்டா) = இரண்டு டம்ளர்
முட்டை = முன்று
உப்பு ‍ ‍ ஒரு சிட்டிக்கை
சர்க்கரை = முக்கால் டம்ளர்
ஏலக்காய் = முன்று
தேங்காய் = பல்லாக கீரியது சிறிது
எண்ணை ‍= சுட‌ தேவையான‌ அள‌வு
நெய் = சிறிது

மிக்சியில் கோதுமை மாவுடன் மேலே குறீப்பிட்ட அனைத்து பொருட்களையும் தேங்காய் பல் தவிர தேவைக்கு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அத்துடன் பொடியாக நருக்கி வைத்துள்ள தேங்காய் பல்லை சேர்த்து தோசைகளாக வார்க்கவும்.






2.முட்டை தோசை
***********************************
தோசை மாவு = ஒரு க‌ப்
முட்டை = இர‌ண்டு

ச‌ர்க்க‌ரை = நான்கு மேசை க‌ர‌ண்டி
நெய் + எண்ணை சுட‌ தேவையான‌ அள‌வு.

முட்டையில் ச‌ர்க்க‌ரையை போட்டு ந‌ன்கு க‌ரையும் வ‌ரை அடித்து வைக்க‌வும்.தோசை வார்க்கும் தவ்வாவில் ஒரு குழி கரண்டி அளவு தோசை மாவை ஊற்றி சுழற்றி உடனே முட்டை கலவையையும் முன்ற்ல் ஒரு பங்கு ஊற்ற்றி தோசை போலவே தேய்க்கவும்.
ஊற்றி சிறிது சுழ‌ற்றி விட்டு எண்ணை + நெய் க‌ல‌வையை விட்டு தனலை குறைத்து வைக்கவும். பிற‌கு அழ‌காக‌ புஸுன்னு பொங்கி ந‌ல்ல‌ வெந்து நிற்கும்.பார்க்க கலர் புல்லாகவும் இருக்கும்.
சுவையான‌ முட்டை தோசை ரெடி.




3. இனிப்பு மைதா தோசை
**************************************
மைதா மாவு = ஒரு கப்
முட்டை = இரண்டு
சர்க்கரை = அரை கப்
தேங்காய் பால் = அரை கப்
தண்ணீர் தேவைக்கு
உப்பு = ஒரு பின்ச்
பொடி ர‌வை = ஒரு மேசை க‌ர‌ண்டி


மைதா உடன் முட்டை,தேங்காய் பால்,ரவை, சர்க்கரை, உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலக்கி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
இல்லை என்றால் மிக்சியிலும் அடித்து கொள்ளலாம்.
பிறகு தோசைகளாக வார்க்கவும். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த தோசை. அப்படியே வழுக்கி கொண்டு உள்ளே போகும், இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

பெரியவர்கள் முட்டை சர்க்கரைக்கு பதில் வெங்காயம், பச்சமிளகாய் சேர்த்து கலக்கி சுட்டு சாப்பிடலாம்.

Sunday, June 7, 2009

முருங்கக்கீரை பொரியல்




தே.பொருட்கள்

ஆய்ந்த கீரை = முன்று டம்ளர்
சின்ன வெங்காயம் = 200 கிராம்
தேங்காய் துருவல் = அரை முடி (முறி)
காஞ்ச மிளகாய்= ஐந்து
உளுந்து = ஒரு மேசை கரண்டி
பூண்டு = ஆறு ப‌ல்
சீர‌க‌ம் = இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி
உப்பு = தேவைக்கு
எண்ணை = ஆறு தேக்க‌ர‌ண்டி

செய்முறை




முருங்க‌க்கீரையை ஆய்ந்து முன்று ட‌ம்ள‌ர் அள்வு எடுத்து அல‌சி வ‌டித்து வைக்க‌வும்.
ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் காஞ்ச‌ மிள‌காய்,உளுந்து, சீர‌க‌ம், பூண்டு போட்டு தாளிக்க‌வும்.
பிற‌கு சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்கி கீரையை சேர்த்து கிள‌றி தேவைக்கு உப்பு சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் வேக‌விட‌வும்.
க‌டைசியாக‌ தேங்காய் துருவ‌ல் சேர்த்து இர‌க்க‌வும்.
சுவையான‌ முருங்க‌க்கீரை பொரிய‌ல் ரெடி.

குறிப்பு:

தினம் சாப்பிடும் உண‌வில் கீரையை அதிக‌மாக‌ சேர்த்து கொள்வ‌து ந‌ல்ல‌து.
முருங்க‌க்கீரை க‌ர்பிணி பெண்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

Thursday, June 4, 2009

ஈரல் கூட்டு





தே.பொருட்க‌ள்





ஈரல் = கால் கிலோ

தக்காளி = ஒன்று

வெங்காயம் = இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசை கரண்டி

மிள‌காய் தூள் = ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு தூள் = தேவைக்கு

ம‌ஞ்ச‌ள் தூள் = அரை தேக்க‌ர‌ண்டி

க‌ர‌ம் ம‌சாலா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி

ப‌ச்ச‌ மிள‌காய் = இர‌ண்டு (பொடியாக‌ அரிந்த‌து)

கொத்து மல்லி தழை = சிறிது

ப‌ட்டை = ஒரு சிறு துண்டு

எண்ணை = நான்கு தேக்கரண்டி







செய்முறை



1. ஈர‌லை சுத்த‌ம் செய்து மேலே உள்ள‌ மெல்லிய‌ இழையை இர‌ண்டு முன்று முறை க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.



2. ஒரு வாய‌க‌ன்ற‌ வான‌லியை காய‌வைத்து அதில் எண்ணை ஊற்றி ப‌ட்டை போட்டு வெடிக்க‌ விட‌வும்.



3.அடுத்து வெங்காய‌ம் + இஞ்சி பூண்டு + த‌க்காளியை ஒன்ற‌ன் பின் ஒன்றாக‌ வ‌த‌க்க‌வும்.

4.த‌க்காளி சுருண்ட‌தும் ஈரலை போட்டு உப்பு + ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து அதிக‌ தீயை வைத்து கிள‌ற‌வும்.



5.அடுத்து மிள‌காய் தூள்,க‌ர‌ம் ம‌சாலா தூள் சேர்த்து கிள‌றி தீயை குறைத்து வைத்து மூடி போட்டு சிறிது நேர‌ம் வேக‌ விட‌வும்.

6. க‌டைசியாக‌ கொத்தும‌ல்லி த‌ழை ம‌ற்றும் ப‌ச்ச‌ மிள‌காயை பொடியாக‌ ந‌ருக்கி சேர்த்து கிள‌றி இர‌க்க‌வும்.





குறிப்பு:



ஆட்டு ஈர‌ல் இர‌த்த‌ம் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ந‌ல்ல‌து.

ரொம்ப‌ நேர‌ம் வேக‌ விட்டால் க‌ல்லு மாதிரி ஆகிவிடும். க‌ருப்பாக‌வும் ஆகிவிடும்.ஹிமோகுளொபின் க‌ம்மியாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள், க‌ர்பிணி பெண்க‌ள் இதை வார‌ம் முன்று முறை சாப்பிட்டால் இர‌த்த‌த்தின் அள‌வு கூடும்.