உருளை கிழங்கு - ஒன்று பெரியது
கடலை பருப்பு - இரண்டு மேசை கரண்டி
நெய் - முன்று தேக்கரண்டி
பாதம் - ஐந்து
பாதம் எஸன்ஸ் - இரண்டு சொட்டு
பால் - கால் கப்
ஏலக்காய் - இரண்டு
சாப்ரான் - இரண்டு பின்ச்
ரெட் கலர் பொடி - ஒரு பின்ச்
1.உருளை கிழங்கை நன்கு வேக வைத்து ஆறியதும் மசித்து கொள்ளவும்.
2.கடலை பருப்பை களைந்து ஐந்து நிமிடம் ஊறவைத்து சுண்டல் பததில் கிள்ளு பதமாக வேக வைக்கவும்.
3.பாதத்தை ஊறவைத்து தோலெடுத்து வைக்கவும்.
4.மிக்சியில் வெந்த கடலை பருப்பு,ஏலக்காய்,பாதம், பால் சாஃரான் சேர்த்து அரைக்கவும்.
5.ஒரு வானலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அதில் மசித்த உருளை கிழங்கு மறும் அரைத்த கடலை பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
6.ஏற்கனவே வெந்து இருப்பதால் இரண்டு நிமிடம் கிளறி அதில் சர்க்கரை சேர்க்கவும்.
7.ரெட் கலர் பொடியும் சிறிது கரைத்து ஊற்றி கொள்ளவும்.
8.கடைசியில் சிறிது பதம் எஸன்ஸும், மீதி நெய் சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறி ஹல்வா பதம் வந்ததும் இறக்கவும்.
குறிப்பு
************
அப்பா சூப்பர் ஹல்வா குழந்தைகளுக்கு வாயில் ஏதும் தட்டாமல் சப்பு கொட்டி கொண்டு உள்ளே பொகும்.
இதில் நட்ஸ் உங்கள் இழ்டம் தான் கொஞ்சம் அதிகமாக சேர்ப்பதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.
ஒன்பது மாதம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
இதை சோமாஸ் செய்ய பூரணமாகவும் பயன் படுத்தலாம்
வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக தாயாரிக்கலாம்.
பட்டர் சேர்த்தால் இன்னும் நல்ல கிளற வரும்.
No comments:
Post a Comment